அமுதக் குடத்தினை சிவபெருமான் சிதைத்தார். அதனால் பல்வேறு இடங்களிலும் அமுதம் சிந்தியது. ஐந்து குரோசம் வரையில் இந்த அமுதம் பரவி ஐந்து தலங்களை உண்டாக்கியதால் பஞ்ச குரோச தலங்கள் எனப்படுகின்றன.[2]
ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகையில் கடந்து செல்லக் கூடிய தூரமாகும். குறைவான நேரத்தில் சென்றடையக் கூடிய இடமாக உள்ளதால், இந்த தலங்களுக்கு சென்று குளத்தில் நீராடி இறைவனை தரிசனம் செய்து வருகின்றனர். மகாமக காலங்களில் இந்தக் கோயில்களை தரிசனம் செய்ய காலங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அதன்படி தரிசனம் செய்கின்றனர்.