' இன்று ஒரு தகவல்'
காலைப் பொழுதில் வானொலியில் ஒலிப் பரப்பாகும் ' இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைக் கேட்டிராதவர் இருக்கமுடியாது. ' இன்று ஒரு தகவல்' மூலம் மக்கள் மனதிலே நீங்கா இடம் பிடித்தவர் திரு. தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள்.
மலர் மல்லிகை வார இதழில் தொடர்ந்து அவர் எழிதிய அனுபவக் கட்டுரைகளே '' அனுபவங்கள் அர்த்தமுள்ளவை!'' என நூல் வடிவம் பெறுகிறது.
இதிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் கிராமிய மணமும் நகைச்சுவையும் ததும்ப எழுத்ப்பட்டவை சில இடங்களில் அவரது ஆதாரங்கங்களையும் வெளிப்படுத்துகிறது. அவரது அனுபவங்கள் அர்த்த முள்ளவை தான். நவரசங்களில் நகைச்சுவையே அனைவராலும் வரவேற்கப்படுகிறது. அந்த அடிப்படையில் நகைச்சுவை கலந்த இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம். வாசகர்கள் வழக்கம் போல இந்த நூலுக்கும் தங்களது நல் ஆதரவை வழங்குவார்கள் என நம்புகிறோம்.