வாழ்க்கையில் நாம் காணும் சம்பவங்களைக் கூட அற்புதமான புரித்தலோடு எழுத்தாக்கி இருக்கிறார் நர்சிம். நுட்பமான விவரிப்புகளால் கதைக்குள் வாசகனை இழுக்கும் வித்தை இவருக்கு கை கூடியிருக்கிறது. ஒவ்வொரு கதையும் அக உலகின் சிறுசிறு விஷயங்களை இழப்புகளை வலியை புன்னகையை வெகுஇயல்பான மொழியில் உணர்த்துபவையாக இருக்கின்றன.