ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நம் நாடு விடுதலை பெறுவதற்கு இந்தய மக்கள் சுதந்திர எழுச்சிகொண்டு பல போராட்டங்களை மேற்கொண்டனர். தேசிய உணர்வுகொண்ட மக்களை நெறிப்படுத்தி கத்தியின்றி ரத்தமின்றி அகிம்சை வழியில் போராட்டங்களைத் திட்டமிட்டு முன் நின்று நடத்திச் சென்றவர்களில் முக்கியமானவர்களைப் பற்றி நாம் அறிவோம். அவர்களில் ஒருவரான கவிக்குயில் சரோஜிதேவியைப் பற்றியே எழுத்தாளர் எம்.ஏ. பழனியப்பன் இந்நூலைப் படைத்துள்ளார்.
அவர் அறிஞர்களின் வாழ்க்கை வரலாறுகள், கட்டுரை நூல்கள், தொகுப்பு நூல்கள் எனப் பலவகையாக நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். எளிமையாக விளக்கமாக வாசகர் விரும்பிப் படிக்கும் வண்ணம் எழுதுவிதில் ஆசிரியர் வல்லவர்.
மெட்ரிக்குலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர். 11-வயதிலே ஆங்கிலத்தில் கவிதைகளை எழுதத் தொடங்கியவர், என்ற சிறப்புக்குரியவர் கவிக்குயில் சரோஜினி தேவியார். அவ்வம்மையார், பாரசீக மொழியிலே ஒரு நாடகம் எழுத அது இதழ்களில் தொடர்ந்து வெளிவர ஹைதராபாத் நிஜாம் பாராட்டுதலைப் பெற்று இங்கிலாந்தில் உயர்கல்வி பயிலும் வாய்ப்பையும் பெற்றவர் என்று அறியும்போது நம்மால் வியப்படையாமல் இருக்க முடியாது.