தற்போது எழுத்தறிவை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் ஐந்தாண்டு திட்டங்களில் பல ஆயிரம் கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்வது ஒருபுறமிருக்க...பல நடைமுறை சிக்கல்கள் எழுத்தறிவுக்கு தடையாகவே உள்ளன. வறுமையின் காரணமாக ஆரம்ப கல்வியை கற்க முடியாத நிலையில் எழுத்தறிவு "அ' போடுவதற்கே திணறுகிறது. வறுமையால் உணவு, உடை, கல்வி இல்லாமல் பள்ளிக்கு செல்ல இயலாமல் குழந்தை தொழிலாளர்கள் உருவாகின்றனர். 14 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் எழுத்தறிவை அளிப்பதுதான் மிகப் பெரிய சவாலாகும். 2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 12.66 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ளனர் என்பது அவலம். இது நாட்டின் மக்கள் தொகையில் 1.23 சதவீதம் என்பது வெட்க கேடான விஷயமாகும்.