நம் அன்றாட வாழ்க்கையில் கணிதம் முக்கிய பங்கினை வகிக்கிறது. மேலும் கணிதப் பாடமானது வாழ்க்கை தொடர்புடைய பாடங்களில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
''எண்ணும், எழுத்தும் கண்ணெனத் தகும்''
கண்ணிற்கு ஒப்பாக கருதப்பட்டுள்ள எண், எழுத்து முதலியன முறையே கணிதத்தையும், மொழியறிவையும் குறிப்பவையாகும். வாழ்வில் வெற்றி பெற இவ்விரண்டு அறிவினையும் ஒருவர் பெறவேண்டிய அவசியத்தையே இக்கூற்று தெரிவிக்கின்றன. தனி மனித வளர்ச்சியோடு சமுதாய வளர்ச்சிக்கும், கணித அறிவும், அதனால் ஏற்படக்கூடிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியும் அவசியமாகிறது. கணிதம் கற்பதால் அறிவு வளர்ச்சியடைவதோடு மன ஆற்றலும் வெளிப்படுகிறது.