அந்த பயங்கரமான சுனாமி கூட்டு மரணங்களையும் பசியையும் நோயையும் தன்னோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டுச் சென்ற பிறகு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அங்கே வருகை புரிந்தார். அவருடைய பக்தர்கள் நாகப்பட்டினத்திற்கருகேயுள்ள அக்கரைப்பேட்டை என்ற சிற்றூரில் ஒரு கோயிலுக்கெதிரே மிகப்பெரிய நீல வெல்வெட் சோஃபா ஒன்றை அமைத்திருந்தனர். சுனாமியால் வீடுகள் அழிக்கப்பட்டு, உற்றார் உறவினர்களை இழந்து, உதவிக்கு யாருமின்றி, சோர்வும் சோகமுமாக ஸ்தம்பித்திருந்த அந்த மக்களுக்கு வாழும்கலை பற்றி போதிப்பதற்காக ரவிசங்கர் அங்கு வந்து சேர்ந்தார்.