உணவையே மருந்தாக உண்டவர்கள் நம் முன்னோர். அடுப்பங்கரையின் ஆரோக்கியம்தான்
ஒட்டு மொத்த குடும்பத்தின் ஆரோக்கியம் என்று கருதினர். இதற்குப் பொருள்
அடுப்பங்கரையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, சமையலும்
தூய்மையானதாக இருக்க வேண்டும், உடலுக்கு கேடு செய்யாத, தீங்கு விளைவிக்காத
ஆரோக்கியமான சத்துமிக்க உணவையே உண்ண வேண்டும் என்ற அடிப்படையில்தான்
அப்படிக் கூறினர்.சோறு சாம்பார் குழம்பு என்று இல்லாமல் துவையல் சட்னி
தொக்கு என தொட்டுக் கொள்ளும் உணவிலும் ஏராளமான பயன்களும் நோய் தீர்க்கும்
காரணிகளும் உள்ளன.தமிழர்களின் பாராம்பரிய உணவான சாம்பார், குழம்பு, குருமா,
ரசம் பற்றிய இந்நூலை வாசகர்களுக்குப் பரிமாறுவதில் பெரும் மகிழ்வு
கொள்கிறேன்.