அழகென்பது தோற்றத்தில் அல்ல... வார்த்தையில், பார்வையில், நடத்தையில்,
பழகும் முறையில் அமைந்திருக்கிறது. அத்துடன் ஒருவர் தன்னை
அலங்கரித்துக்கொள்ளும் முறையையும் அழகு என்று, குறிப்பிடலாம்.ஆடைகளை
உடுத்திக்கொள்வதில் இருந்து நடக்கும் 'பாதம் வரையில் ஒரு பெண் தன்னை
அழகுபடுத்திக் காட்டமுடியும் என்பதைத்தான் இந்நூல்
கூறுகிறது.எதற்கெடுத்தாலும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால், முகத்தில்
சீக்கிரமே சுருக்கம் வந்து வயதான தோற்றத் தைக் கொடுத்து விடும். சிரிக்கப்
பழகிக்கொண்டால் உடல் ஆரோக்கியத்துடன் முகமும் 'பொலிவுடன் காட்சி அளிக்கும்.
இது மனம் சம்பந்தப்பட்ட அழகு.இருக்கும் அழகைக் காப்பாற்றிக்கொள்ளவும்.
மேலும் மெருகூட்டிக்காட்டவும் செயற்கையாகவும் நாம் சில செய்முறைகளைச்
செய்யவேண்டியுள்ளது. வீட்டில் இருக்கும் பொருட்கள், மற்றும் எளிதில்
கிடைக்கக் கூடிய பொருட்களைக் கொண்டு ஒருவர் அழகானவராகக் காட்சி அளிக்க
முடியும் என்பதைக் கூறுகிறது இந்நூல்.