ஆன்ம தேட்டத்தின் தத்துவ உச்சங்களும், பக்தி உள்ளத்தின் விம்மிய உணர்வுகளும் ஒன்றறக் கலக்கும் இடம் ஆழ்வார்களின் பாசுரங்கள். திருவாய்மொழி முதன்மையாகத் திவ்யப்ரபந்தங்கள் அனைத்துக்கும் எழுந்த உரைப் பெருக்கம், அவற்றின் உட்பொருள் திரட்டு, அவற்றுக்கான விளக்கம் என்ற பெரும் தமிழ்க் கடவுள் காதல் தத்துவ உலகத்தின் மறுபெயர் பகவத் விஷயம். அதில் அள்ளிக் குடித்த ஓர் அங்கை அமுதம் இந்த நூல்.