அறிவுக்கும்,நம்பிக்கைக்கும் முழுதும் உண்மையான இணக்கத்தைச் சாதித்தல் என்பது வாழ்க்கை,நெடிய அனுபவம், செறிந்த அகவாழ்வு ஆகியவை சேர்ந்து மனிதனுக்கு விடும் சவாலாகும். இந்தக்காலம் பரந்த சவாலைப் புரிந்துகொள்ள சுவாமி விவேகாந்நதலின் வாழ்க்கையும், எழுத்துகளும் நமக்கு உதவுக்னிறன.இந்தச் சவாலையும் மீறி மனித குலத்திற்கான ஆகப்பெரிய இணக்கச் சமன்பாட்டை, அறிவு, நம்பிக்கை என்ற இந்த இரட்டையின் விஷயத்தில் சாதித்திருப்பவர் நம் தமிழ்கூறும் நல்லுலகத்துத் திருக்குருகூர் நம்மா ழ்வார் என்பது இந்த நூலாசிரியனின் தேற்றம். இந்த தூல் மனித குலத்தின் மிகப்பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு.