இந்து
மதம் பரந்து விரிந்த ஆலமரம் மாதிரி. இதில் எல்லாக் கருத்துகளுக்கும்
இடமுண்டு. இந்துமதக் கருத்துகள் ஆழமானவை. கடல்போல் விரிந்து கிடக்கும்
இந்துமதக் கொள்கையை முற்றும் அறிந்தவர் யாருமில்லை. ஒவ்வொரு வரும் தன்
பங்கிற்கு ஒரு சில துளிகளை எடுத்து மனித வாழ்வு மேம்பட
வழிகாட்டியுள்ளார்கள். அந்த வகையில் நான் படித்த பல இடங்களில் கேட்ட பல
ஆன்மீகக் கருத்துக்களைத் தொகுத்து 'தேடக்கிடைக்கா தெய்வீகக் குறிப்புகள்'
என்ற தலைப்பிட்டுக் கொடுத்துள்ளேன். இதில் உள்ள கருத்துகள் தமிழர்களாய்ப்
பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும். எளிதாக எல்லோரும்
தெரிந்து கொள்ள ஆன்மீகத் தேடல்களுடன் ஆன்மீகத்தை அறிய விரும்புகிறவர்கள்
இந்த நூலை முழுமை யாகப் படிக்க வேண்டும். எல்லோருடைய கையிலும் இருக்க
வேண்டிய நூலாகும்.