இருள்நிலையில்
(கேவல அவத்தையில் இருந்த உயிர், மருள்நிலையில் சகல அவத்தையில்) வந்து,
பின்னர் அருள் நிலை (சுத்த அவத்தை) பெறும்வரை ஓர் ஆத்ம சாதகனுக்கு வேண்டிய
அனைத்து செய்திகளையும் தன்னகத்தே கொண்ட, ஓதிக் கடைத்தேற தோத்திரமாகவும்,
உணர்ந்து கடைத்தேற சாத்திரமாகவும் விளங்கும் தாயுமான சுவாமிகளின் பாடல்
திரட்டுக்கு, கால் நடைக்கு ஏற்ப ஓர் உரை வேண்டும் என்று அன்பர்கள்
விருப்பங்கொள்ள, அதனுக்கு திருவருளும் குரு வருளும் துணைநிற்க, இப்பொழுது
இது உங்கள் கைகளில் தவற்கிறது. 'கரைஒதுங்கிய முத்துக்களே இவ்வளவு எனில்,
மூழ்க எவ்வளவு முத்துக்கள் கிடைக்கும்? என்பது ஓர்ந்து, மூழ்கத் துடிக்கும்
மெய்யன்பர்களுக்கு எல்லா நலமும் கிடைக்க சிவப் பரம்பொருளை இறைஞ்சுவோமாக!