சிலப்பதிகாரம் (30:160) குறிப்பிடுகிறது. இம் மன்னனால் பத்தினி வழிபாடு இலங்கையில் பரவியதாக சிங்களவர்களிடையே பாரம்பரியச் செய்திகளுண்டு. அத்துடன் ஈழத் தமிழர்களிடையே கண்ணகை (கண்ணகி) வழிபாடும், கண்ணகியை மையமாகக் கொண்ட வாய் மொழி இலக்கியங்களும் வழக்கிலுள்ளன. எனவே சிலப்பதிகாரம் தொடர்பான ஆய்வில் ஈழத்து அறிஞர் களின் பங்களிப்பு அவசியமாகிறது.
இத்தொகுப்பில் ஈழத்து அறிஞர்கள் இருவரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. என்.சண்முகலிங்கனின் கட்டுரை, இலங்கையின் கண்ணகை வழிபாட்டினை மையமாகக் கொண்டு சிலப்பதிகாரத்தை ஆராய்கிறது. கண்ணகை வழிபாடு நிகழும் நிலப்பகுதிகளை வரை யறுத்துக்கொண்டு தென்னிலங்கைச் சிங்கள மக்களிடையே வழங்கும் பத்தினி வழிபாடு தொடர்பான தரவுகளையும், தமிழர்களிடையே வழங்கும் தரவு களையும் ஒப்பிட்டு நோக்கியுள்ளார்.