அறுபத்து மூன்று நாயன்மார்கள்
Arupathu mundru naayanmargal
₹105+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூலூர் கலைப்பித்தன்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :251
பதிப்பு :4
Published on :2009
ISBN :9788189780586
குறிச்சொற்கள் :தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், பிரார்த்தனைகள்
Out of StockAdd to Alert List
அறிவியல் கண்டுபிடிப்புகளால் மனிதகுலம் பல வாழ்க்கை வசதிகளைப் பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், மனித மனமோ ஆசைகளில் உழன்று தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் விரக்தியடைந்து, அமைதியைத் தேடி அலையத் தொடங்கிவிடுகிறது. சஞ்சலம் அடையும் மனதை ஒருநிலைப்படுத்த, விஞ்ஞானத்தில் வழிகள் இல்லை!
மனித வாழ்வு செம்மையுறவும் பயனுடையதாகப் பரிமளிக்கவும் எத்தனையோ குருமார்கள் மனிதர்களோடு மனிதர்களாக இப்பூவுலகில் தோன்றி நன்மொழிகளை நல்கியிருக்கிறார்கள். எளிமையும் ஈர்ப்பும் நிறைந்த சின்னச் சின்னக் கதைகள் மூலம் அருளுரைகள் வழங்கி, மனிதகுலம் அமைதியுடன் வாழ வழிகாட்டியிருக்கிறார்கள்.
பக்தி, யோகம், மந்திர_தந்திரங்கள் அனைத்தும் ஞான மார்க்கத்திலேயே கற்றுத் தேர்ந்த குருமார்கள், வெறுமனே அற்புதங்கள் நிகழ்த்துவதற்காக மட்டும் இந்த உலகில் பிறப்பெடுக்கவில்லை. மனிதனுக்கு அவனது பிறப்பின் நோக்கத்தை உணர்த்தி, இயற்கையோடு இனிதாக இணைத்து வைக்கவேண்டியே அவதரித்திருக்கிறார்கள். தவவாழ்வு வாழ்ந்த குருமார்களின் அறிவுரைகளும் அவர்களுடைய வாழ்க்கைச் சம்பவங்களும் இருளில் தவிக்கும் மனிதர்களுக்குக் கைவிளக்கு போல துணைபுரிகின்றன.
இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒன்பது குருமார்களின் வாழ்க்கை வரலாறுகளும் தனித்தனியாக நூல்களாக வரவேண்டியவைதான். இருந்தாலும், சுருங்கக் கூறி விளங்கவைப்பது என்னும் முறையில், அற்புதமான நடையில் இந்நூலை வடிவமைத்துள்ளோம்.
'குருவே சரணம்' நூலை ஆராய்ந்து படிப்பவர்கள், குருமார்களின் கருத்துக்களைத் தங்கள் வாழ்க்கையிலும் பின்பற்றினால், இந்நூலை வெளியிட்டதன் நோக்கம் நிறைவேறியதாக எண்ணி மகிழ்வேன்.