பி. வாசுதேவன்தம்பி என்கிற இவர், 1937 - ஆம் ஆண்டில் கேரளாவின் ஹரிப்பாடு நகரில் பிறந்தவர். எம்.ஏ. , எல்.எல்.பி. பட்டங்கள் பெற்ற இவர் எல்.ஐ.சி. நிறுவனத்தில் அதிகாரியாக வாழ்க்கையைத் தொடங்கி 1986 - ல் பணியை ராஜினாமா செய்து விட்டு வழக்கறிஞாராகவும் எழுத்தாளராகவும் மாறினார். குறுகிய காலத்துக்குள் மலையாள இலக்கிய உலகில் தனி இடம் பெற்ற தம்பி, 15-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.
1985-86 ஆம் ஆண்டுகளில் சாவி வார இதழில் வெளியான 'கிருஷ்ண பருந்து' நாவனில் முழுமையான புத்தக வடிவம் இந்த கிருஷ்ணப்பருந்து.
கிருஷ்ணப் பருந்து ஒரு நல்ல நாவல். கூடு விட்டுக் கூடு பாயும் உணர்வை ஏற்படுத்தும் நாவல்.