கி.மு. 12 நூற்றாண்டில் வேணுதத்தன் என்னும் அரசனின் வேண்டுகோளுக்கு இணங்க ' ரதி ரகசியம்' என்னும் கொக்கோகம் நூலை இயற்றினார். அதாவது ஒரு பெண் விரகதாபம் தாங்க முடியாத்தால் தன் ஆடைகளைக் களைத்து விட்டு தன்னை எவரேனும் திருப்தி செய்யும் வரை நிர்வாணமாகவே ஊர்ஊராகச் செல்வேன் என்று சபதம் எடுத்துக்கொண்டு அரசனுடைய சபைக்கு வந்தாள். அரசன் அவளைப் பார்த்து பெண்ணே இப்படி ஆடையில்லாமல் பிறந்த மேனியாக வந்து நிற்கிறாயே உனக்கு வெட்கம் நாணம் ஏதும் இல்லையா என்று கோபமாகக் கேட்டான். அதற்கு அந்த நிர்வாணப் பெண் என்னைத் திருப்தி செய்யக்கூடிய ஆற்றலுடைய ஆண்மகன் இந்த சபையிலே எவனாவது இருக்கிறானா என்று கேட்டாள். அப்போழுது அரச சபையிலிருந்து கொக்கோகர் என்ற ரிஷி இவளை நான் அடக்குவேன். எனக்கு விடை தருக. என்று அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு நிர்வாணப்பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அஒருனைய காமக்களியாட்டத்தின் செயலை அவளால் தாங்க முடியவில்லை போதும் போதும் அப்பப்பா என்னைவிட்டுவிடு என்று கதறினாள் அந்தப்பெண். கொக்கோக முனிவர் அவளது கையிலும் காலிலும் பொன் ஊசியிட்டு அவளை அரச சபைக்கு மீண்டும் அழைத்து வந்தார். அப்போழுது அவள் நாணமுற்று ஆடை அணிந்து கொண்டாள். இவளை எவ்வாறு அடக்கினீர்கள் என்று அரசன் கேட்க அவனுக்கு கூறும் விடையாகவே கொக்கோ முனிவர் 'ரதி ரகசியம்' என்னும் இவ்வரிய நூலை இயற்றினார்.
- பதிப்பகத்தார்.