
ஆன்மாவும் முக்தியும்
aanmavum mukthium
₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மணப்பள்ளி சிவ. வீரமணி
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
அத்வைத வேதாந்தத்தின் கருத்துப்படி, பிரபஞ்சத்தில் உண்மையாக இருப்பது
ஒன்றே. அதைப் பிரம்மம் என்று அத்வைத வேதாந்தம் குறிக்கிறது. மற்ற எதுவுமே
உண்மையற்றவை, மாயையின் சக்தியால் பிரம்மத்திலிருந்து வெளிப்படுவை,
உருவாக்கப்படுபவை. அந்தப் பிரம்மத்தை மீண்டும் அடைவதே நமது குறிக்கோள்.
நாம் ஒவ்வொருவரும் அந்தப் பிரம்மமாகிய உண்மையும் இந்த மாயையும் கலந்த
கலவைதான். மாயை அல்லது அறியாமையிலிருந்து நம்மால் விடுபட முடிந்தால், நாம்
உண்மையில் யாரோ அதுவாக ஆவோம். இந்தத் தத்துவத்தின்படி, ஒவ்வொரு மனிதனும்
மூன்று பகுதிகளால் ஆனவன்-உடல், அந்தக்கரணம் அல்லது மனம், அதன் பின்னால்
ஆன்மா. இந்த ஆன்மாவின் புறப் போர்வை உடல், அகப் போர்வை மனம். உண்மையில்
ஆன்மாவோ எல்லாவற்றையும் உணர்ந்து அனுபவிக்கிறது. உடலில் உறைவது ஆன்மாவே.
இதுவே அந்தக்கரணமான மனத்தின்மூலம் உடலை இயக்குகிறது.
