
81 ரத்தினங்கள்
₹210+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஷாதேவி
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2026
குறிச்சொற்கள் :Sprituality, ஆன்மிகம், Tamil Thisai, தமிழ் திசை, Ushadevi, உஷாதேவி,
Out of StockAdd to Alert List
இறை அடியார்களைப் போற்றி வணங்குவோம்..!
திருக்கோளுர் பெண் பிள்ளை ரகசியம் என்பது அவள் வியந்து பார்த்த இறை அடியவா்களின் பெருமை மிக்க செயல்களை பற்றிய வரிகளாகும். இவை அனைத்தையும் நாம் ரத்தினங்களாக மதித்து பொக்கிஷமாக போற்ற வேண்டும்.
இறைவனின் மீது தீராத காதல், மாறாத அன்பு வேண்டும். காதலுக்கும் அன்புக்கும் வேறுபாடு உண்டு. காதல் என்பது எப்போதும் சுரந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருவா் மீது நாம் வைக்கும் அன்பின் அளவு மாறக்கூடாது, அதுவும் நம்மை படைத்து காத்து ரட்சிக்கும் இறைவனின் மீது நாம் வைக்கும் அன்பு நம் வாழ்வை வளப்படுத்தும்.
இதையே பாரதி, ‘உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்’ என்கிறார். பாரதி பார்க்கும் அனைத்திலும் இறைவனைக் கண்டார்.
