book

மயிலங்கி மங்கையின் மரகதப்பெட்டி

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காலச்சக்கரம் நரசிம்மா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :456
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

ல்லெண்ணத்துடன் நமது இல்லம் வருபவர்கள், பகலில் வலது காலை எடுத்து வைத்து இன்முகத்துடன் நுழைந்து விருந்தோம்பலை ஏற்பார்கள். தீய எண்ணத்துடன் வருபவர்கள், இரவில் கொல்லை வழியாக இடது காலை வைத்து இல்லம் புகுந்து, கொலை பாதக செயல்களில் ஈடுபடுவார்கள். எனவேதான், சூரியன் அஸ்தமித்தவுடன் கொல்லைக்கதவைத் திறந்து வைக்கக் கூடாது என்பது மனைசாத்திரம் கூறும் வாக்கு .

பாரத பூமியின் கொல்லைப்புறமான சேர நாட்டு மேற்கு கடற்கரை வழியாக சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில், மிளகு வாங்கவேண்டி வந்த அரேபியர்கள், டச்சுக்காரர்கள் ஆகியோர் அந்தப் பகுதியின் வளங்களையும், குவிந்து கிடந்த பொக்கிஷங்களையும் கண்டு மலைத்துப்போய் நின்றிருந்தனர்.