கனவுகளும் பலன்களும்
₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :வித்யா பப்ளிகேஷன்ஸ்
Publisher :Vidhya Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :7
Published on :2009
குறிச்சொற்கள் :கனவுகள் , ஜோதிடம், ராசிப்பலன், கிரகங்கள், யோகங்கள, பொருத்தம்
Out of StockAdd to Alert List
கனவுகள் தூங்கும்போது நகரும் படக்காட்சிகள் போலத் தோன்றுவதால் அவை மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்களின் சிந்தனையைக் கவர்ந்துவந்துள்ளன. எனவே, கனவு என்றால் என்ன என்பது பற்றியும் அது எப்படி ஏற்படுகிறது என்பது பற்றியும் மிகப் பழங்காலத்திலிருந்தே மனிதர்கள் சிந்தித்து வந்துள்ளனர்.உண்மையில் பெரும் பாலான மக்கள் கனவுகளுக்கு பிரத்தியேகப் பலன்கள் இருப்பதாக முழுமையாக நம்பத் தொடங்கினர். கனவுகளின் பலன்களைப் பொருத்தவரையில், இரவில் தூங்கும் போது காணப்படும் கனவுகள் மட்டுமே பலிக்கும் என்பது ஒரு பொதுவான கருத்து. பகலில் தூங்கும் போதும் கனவுகள் தோன்றுகின்றன. இவற்றைப் பகல் கனவு என்பர். பகல் கனவுகள் பலிக்காது என்பது ஒரு பொதுவான கருத்து.வைகறையில் காணும் கனவு அதாவது விடிவதற்கு சற்று முன்பு அதாவது நான்கு மணியிலிருந்து ஜந்து மணிக்குள் காணும் கனவு உடனே பலிக்கும். முனி இரவில் காணும் கனவு தாமதமாகப் பலிக்கும். பின் இரவில் காணப்படும் கனவு சில மாதங்களில் பலிக்கலாம். இவை கனவைப் பற்றிய நமது முன்னோர்களின் நம்பிக்கைகள்.