book

மண்ணில் தெரியுது வானம்

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. சிதம்பர சுப்பிரமணியன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :271
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789382648710
Add to Cart

மகாத்மா காந்தியைப் பற்றி எத்தனையோ நூல்கள் வந்திருந்தாலும்,அவற்றையெல்லாம்விட சிறப்பானது இந்த நாவல். ஏனென்றால்,காந்தியோடு அந்தக் காலத்திய இந்தியாவையே நம் காண்பித்திருக்கிறார் ஆசிரியர். ஒவ்வோரு இந்தியனும் அப்போது என்ன நினைத்தான், சுதந்திரப் போராட்டம் எப்படி நடந்தது, சராசரி மனிதனின் வாழ்வை அது எப்படி பாதித்தது, ஆங்கிலேயர்களின் சார்பாக பேசியவர்களின் கருத்து என்னவாக இருந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக அகிம்சை, சத்தியம் ஆகிய அறநெறிகளை ஒவ்வோரு மனிதனும் தன் உயிர் மூச்சாக ஏற்று கொண்டு வாழ்வது எப்படி, இவை எல்லாவற்றுக்குமான இலக்கியச் சாட்சியம்தான் ‘மண்ணில் தெரியுது வானம்’. இதுதவிர, 1920இல் இருந்து 1948 வரை சென்னை எப்படி இருந்தது என்பதையும் விலாவாரியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது இந்த நாவலில். ‘மண்ணில் தெரியுது வானம்’ என்ற இந்த நாவல்,இந்தியாவின் அனைத்துமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு,ஒவ்வொரு இந்தியராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒரு நவீன காவியம். - சாரு நிவேதிதா