
சத்தியம் காத்த அரிச்சந்திரன்
₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவபிரியன்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2021
Out of StockAdd to Alert List
வழியில் காளிகோயில். அரிச்சந்திரன் அதனை வணங்கினான். அப்போது அங்கு இருந்த கல்தேர் முதலானவை பொன்னாக மாறிவிடவே காளி அவற்றை அரிச்சந்திரனுக்கே பரிசாகத் தந்துவிடுகிறாள்.
சந்திரமதி பிறக்கும்போதே அவள் கழுத்தில் தாலி இருந்தது. இந்தத் தாலியைக் காண்பவன் இவளை மணப்பான் என அசரீரி அப்போது சொல்லிவைத்தது. சுயம்வரத்தின்போது அரிச்சந்திரன் அவளது தாலியைப் பார்த்துச் சொல்லவே சந்திரமதி அரிச்சந்திரனுக்கு மணமுடித்து வைக்கப்பட்டாள்.
இவர்களுக்குப் பிறந்த ஆண்குழந்தைக்கு வயது ஏழு ஆகும்போது அரிச்சந்திரன் நாட்டை இழந்து அல்லல்படுகிறான்.
அரிச்சந்திரன் மனுநெறி தவறாதவன் என்று இந்திரன் சபையில் வசிட்டர் கூறுகிறார். விசுவாமித்திரர் மறுக்கிறார். அரிச்சந்திரனைச் சத்தியம் தவறச் செய்கிறேன் எனச் சபதம் செய்த விசுவாமித்திரர் செயலில் இறங்குகிறார்.
‘நான் வெளியில் இருந்தால் இந்த உண்மையை அரிச்சந்திரனிடம் சொல்லிவிடுவேன். ஆகவே அரிச்சந்திரன் விவகாரம் முடியும்வரையில் என்னைத் தேவர் காவலில் வையுங்கள்’ என நாரதர் கூறுகின்றார். (இது இந்தக் காப்பிய ஆசிரியர் புகுத்திய புதிய செய்தி)
