book

மின்-அஞ்சல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. சிவலிங்கம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :143
பதிப்பு :2
ISBN :9788183793551
Add to Cart

மின் அஞ்சல் தோன்றி 2001 ஆம் ஆண்டோடு முப்பது வயது முடிகிறது; அமெரிக்கப் பொறியாளர் ரே டோம்லின்சன் (Ray Tomlinson) 1971 ஆம் ஆண்டு இம்முறையினை அறிமுகப் படுத்தினார். ஆனால் அவர் அனுப்பிய முதல் செய்தி என்ன, யாருக்கு அதை அனுப்பினார் என்பதை அவராலேயே நினைவுகூற இயலவில்லை. கேம்பிரிட்ஜில் முதன்மைப் பொறிியாளராகப் பணியாற்றும் அவருக்கு நினைவில் இருப்பதெல்லாம் 200 வரிகள் அடங்கிய குறியீடுகளும், இரு கணினி நிரல்களும் (programs) மட்டுமே. அவற்றுள் ஒரு நிரல், கோப்பு மாற்றங்களுக்கும், மற்றொன்று செய்தி அனுப்புவதற்கும் பயன்பட்டவை. இந்நிரல்களில் இருந்த குறை என்னவெனில் அனுப்புவோரும், பெறுவோரும் ஒரே வகையான கணினியைப் பெற்றிருந்தால் மட்டுமே, அவற்றிலுள்ள அஞ்சல் பெட்டிகள் இயங்கி, செய்திப் பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருந்தது. விரைவில் இக்குறையை டோம்லின்சன் போக்கினார். கணினி வலையமைப்பில் (computer network) தொலை தனியாள் அஞ்சல் பெட்டிகளை (remote personal mailboxes) உருவாக்கி செய்திகளைப் பெறுவதற்கும், அனுப்புவதற்குமான வழிகளை உருவாக்கினார். மேலும் தற்போது அனைவருக்கும் பழக்கமான @ என்ற குறியீட்டைப் பயன்படுத்தி, உரியவருக்குச் செய்தியை, சரியாகச் சேர்ப்பிக்கும் முறையை உருவாக்கியவரும் இவரே. முதன் முதலில் மின் அஞ்சல் வசதி அமெரிக்கப் பாதுகாப்புத் துறையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது; ஆனால் கடந்த முப்பது ஆண்டுகளில் மிக முக்கியமான தொலைத் தொடர்புத் தகவல் வசதியாக மின் அஞ்சல் வளர்ச்சியுற்று விளங்குகிறது.