book

பள்ளிக்குச் சென்ற சிட்டுக் குருவிகள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாரா. நாச்சியப்பன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2021
Add to Cart

சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை. அவை வால் வெட்டிப் பறக்கும் போதும், குந்தும் போதும், இரை கொத்தும் போதும், நடக்கின்ற நாடகம் கண்ணுக்கு விருந்து சலிப்புத் தராத நல்ல பொழுது போக்கு. சிட்டுக் குருவிகளைப் பார்க்கின்ற போதே நம் உள்ளத்தில் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. சிறு பிள்ளைகள் துறு துறு வென்று இருந்தால் சிட்டுக்குருவி போல் இருக்கிறான் என்று சொல்லுவார்கள். சிட்டுக் குருவிகளின் செயல்களைச் சுவைத்துச் சுவைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் பல பாடல்கள் எழுதியுள்ளார். இப்படிப்பட்ட சிட்டுக் குருவிகளை வைத்து இங்கே ஐந்து கதைகள் எழுதியிருக்கிறேன்.இந்த ஐந்து கதைகளும் புதிய கற்பனையில் பிறந்தவை, சின்னஞ் சிறுவர்களுக்கு உகந்தவை. படிக்கச் சுவை கூட்டு பவை, அறிவுக் கருத்துக்களை யூட்டுபவை. உள்ளத்தில் புதிய எண்ணங்களை விதைப்பவை. பண்பை வளர்ப்பவை: