book

வளம் தரும் மரங்கள் பாகம் - 4

₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எஸ். மணி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :294
பதிப்பு :3
Published on :2020
ISBN :9788123400501
Add to Cart

''வளம் தரும் மரங்கள்" என்ற தொடர் வரிசையில் நான்காம் பாகம் வழக்கம் போல், இதுகாறும் 1991ம் ஆண்டு முற்பகுதி வரை) வெளிவந்துள்ள தகவல்களைத் தாங்கி வெளிவருகிறது. மரங்களில் பொதிந்துள்ள இரசாயனங்கள் பற்றிய ஆராய்ச்சிகளுடன் கூட மாசுக்களை உண்ணும் / வடிகட்டும் மரங்களின் இயல்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன. இத்தசுவல்களும் இந்நூலில் இணைக்கப்பட்டுள்ளன. மரங்கள். வருவாய்க்கு ஆதார ஊற்றுக்களாகும்; உழைத்து ஊதியம் பெற்றிட, அவை வழிவகுக்கும்; வளவாழ்விற்கு வழி செய்யும். இக்குறிக்கோள்களைக் கொண்டுள்ளது இத்தொடர்; அதற்கான தகவல்களையும் திரட்டித் தருகிறது இப்பாகம். மரங்களின் பயன்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து, புதுப்புது தகவல்கள், வழிமுறைகள், பயன்கள் ஆகியவற்றை உருவாக்கித் தந்த விஞ்ஞானிகளுக்கு எங்களது நன்றி. அத்தகவல்களை உடனுக்குடன் வெளியிட்டு வரும் கட்டுரை ஆசிரியர்கள் நூலாசிரியர்கள், நூல் பிரசுர நிறுவனங்கள் பத்திரிகை நிறுவனங்கள் ஆகியோருக்கும் எங்களது நன்றி. விஞ்ஞான வளர்ச்சிக்கு அதிலும் வேளாண்மை சார்ந்த விஞ்ஞான வளர்ச்சிக்கு தமிழகத்தில் அறிவுத் திரட்டுக்களை வழங்கி வருகிறார்கள்.