book

அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்

₹499+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்டீபன் ஆர். கவி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788183223119
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

அதிக ஆற்றல் வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள் எனும் புத்தகத்தில் கூறப்பட்ட 7 பழக்கங்கள் மொத்தத்தில் இவை தான்.....

(1) இதில் முதல் பழக்கமாக இவர் முன்வைப்பது, "முன்யோசனையுடன் செயலாற்றுதல்" என்பதை!
அதாவது நடக்கும் பிரச்சனைகளுக்கு யார் மீதும் பழி போடாமல் நம்மால் என்ன செய்ய முடியும் என யோசித்தல்......

(2) பழக்கம் இரண்டு எனக் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை!அதாவது இலக்கை வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், இலக்கை நோக்கி ஓடவும் செய்தல். இதில் "தனிமனித தலைமைத்துவம்" குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

(3) மூன்றாவது பழக்கமாக, "முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்" என்பது.
அதாவது முக்கியமான வேலைகளுக்கு மட்டும் முதலில் முக்கியத்துவம் கொடுத்தல். இதில் நிர்வாகம் குறித்த கருத்துகள் நிறைய உள்ளன.

(4) "எனக்கும் வெற்றி, உனக்கும் வெற்றி" என்ற சிந்தனை நான்காவது பழக்கமாகக் காட்டப்படுகிறது.
அதாவது அடுத்தவர் பற்றி பொறாமையை விட்டு விட்டு சொந்த வெற்றியை மாத்திரம் இலக்காக்கிக் கொள்ளல். இதில் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தலைமைத்துவம் குறித்த கருத்துகள் உள்ளன.

(5) "முதலில் புரிந்துகொள்ளுதல், பின்னர் புரியவைத்தல்" என்ற பழக்கத்தை ஐந்தாவதாகக் காட்டுகிறார்.
அதாவது அடுத்தவர்களின் தேவைகளை புரிந்து செயற்படல் ஆகும்.
இதில் பிறர் நிலையில் தன்னைப் பொருத்திப் பார்த்து கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்த கொள்கைகள் கூறப்பட்டுள்ளன.

(6) ஆறாவது பழக்கம் எனக் காட்டுவது, "கூட்டு இயக்கம்" என்பதை! படைப்பாற்றலுடன்கூடிய கூட்டுச் செயல்பாடுகள் குறித்த கொள்கைகள் இதில் உள்ளன.

அதாவது அவ்வப்போது நமக்கு தேவையானோருடன் கை கோர்க்க வெட்கப்படாமல் அவர்களோடு கைகோர்த்துக்கொள்ளல் ஆகும்.

(7) ஏழாம் பழக்கமாக, "எப்போதும் நம்மை கூர்தீட்டிக்கொள்ளல்.

அறிவையும் உடலையும் எப்போதும் கூர்மை படுத்திக்கொள்ளல் என எல்லாத் தளங்களிலும் சுயபுதுப்பித்தலை மேற்கொள்வது குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன.

புத்தகத்தில் அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளது தன்னிலை முன்னேற்றம்தான். தான் மாறினால் மட்டுமே உலகம் மாறும் என்னும் கருத்து அதிகம் அறிவுறுத்தபட்டுள்ளது.

ஆங்கில மூலநூலின் சாரம் கெடாமல் மொழிமாற்றம் செய்திருப்பது மிக மிக சிறப்பு.