book

சக்தி வழிபாடு

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பரணிதரன்
பதிப்பகம் :சூரியன் பதிப்பகம்
Publisher :Suriyan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

அன்பு, இரக்கம், கருணை, பாசம், தயை என்று மனதின் மென்மையான உணர்வுகள் என்னவெல்லாம் உண்டோ அந்த உணர்வுக்கெல்லாம் மனித ரூபமாகத் தாய் விளங்குகிறாள் என்பது உலகறிந்த உண்மை. தாய் ரூபமாகவே அம்பிகை தன் பிள்ளைகள் மீது கருணை பொழிகிறாள். அதற்கும் அப்பால் தெய்வ அனுசரணையாக, தன்னைத் தஞ்சமடைந்தோரை கைத்தாங்கலாகத் தாங்கி, மடிமீது கிடத்தி, ஆசுவாசமளித்து, ஆற்றுப்படுத்தும் அனுக்ரக தெய்வமாக விளங்குகிறாள். இந்த அம்பிகை பல்வேறு ரூபங்களைக் கொண்டுள்ளாள். அவரவர் மனோநிலைக்கேற்ப, அவரவர் மகிழத்தக்க வகையில் பல வடிவங்களில் காட்சி தருகிறாள். அத்தனை வடிவங்களையும் தரிசித்து மகிழ்வதோடு, அவற்றை பூஜித்தும் தன் நன்றிக் காணிக்கையை பக்தன் செலுத்துகிறான். பல்வேறு காரணங்களுக்காக பராசக்தி மேற்கொண்டிருக்கும் சொரூபங்களை இந்தப் புத்தகம் விரிவாக, தெளிவாக விளக்குகிறது. தேவி உபாசகர்களுக்கு, தேவியைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு மிகவும் நட்பான புத்தகம் இது. Qty: