book

அரும்பிய முல்லை

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தெ.சீ.தீத்தாரப்பன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :3
Published on :2000
Add to Cart

முல்லை மறைந்தாலும் அன்று காற்றில் மிதந்து வந்த அதன் இனிய வாசனை இன்றும் என்னை வசீகரிக்கிறது. செல்லையாவை இழந்த நமக்கு இன்று காண்பது போலிருக்கிறது. அவர் முகத்தின் பொலிவும், சுவை நிறைந்த பேச்சும் கலையுணர்ச்சி ததும்பும் கடிதமும் கட்டுரையும், அரும்பிய இந்த முல்லையை, நன்றாக மலர்வதன் முன்பே யாரோ பறித்துவிட்டார்கள் ஆனால், எங்கிருந்தோ அதன் நறுமணம் நம் மனதை அதன்பால் கட்டி இழுக்கின்றது! செல்லையாவின் கவியையும், கதையையும், கட்டுரையையும் நாம் நுகர்ந்து மெய்ம்மறப்பதன் காரணம், அம்முல்லையின் மணம்தான் தன்னைப் பறிகொடுத்தாகிலும், தன் ஆசை முழுவதையும் சேர்த்து உருவாகக் காட்டும் உள்ளப் பெருக்கை, தன்னுடைய பாட்டிலும் எழுத்திலும் காட்டுவதே கலைஞன் சதா தேடுகிற பேரின்பம். அதுவே கலைஞன் செய்கிற தியாகமும்.