book

கலவையில் பிறந்த பேரொளி

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெமிலி எழில்மணி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :68
பதிப்பு :4
Published on :2016
Add to Cart

காஞ்சிப்பெரியவாளைத் தரிசிக்க தேனம்பாக்கம் சென்றேன். நான் போகும்போது மணி பன்னிரெண்டுக்கு மேலாகிவிட்டது. நான் பலமுறை சென்றபோதும் மௌன நிலையில்தான் தரிசிக்க முடிந்தது. இன்று அதுகூட முடிகிறதோ இல்லையோ என்ற ஏக்கத்துடன் சென்ற எனக்கு பேரதிர்ச்சி---இன்ப அதிர்ச்சி ! கிணற்றுக்கு அந்தப்பக்கம் சாவகாசமாக காலை நீட்டிக்கொண்டும் மந்தகாசப் புன்னகையும் தவழ இந்தப்புறம் நின்றிருந்த பக்தர்களுடன் அளவளாவிக் கொண்டிருந்தார். பத்துமணி முதல் அப்படிப் பரவசமாக அருள்மழை பொழிந்து கொண்டிருக்கிறார் என்றனர் அருகே இருந்தவர்கள்.
உத்திரப்பிரதேசத்து அன்பர் ஒருவர் பதினெட்டுப் புத்தகங்களை இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதினவராம். பெரியவாளிடம் அவரது புத்தகங்களை மொழிபெயர்க்க அநுமதி கேட்டுக்கொண்டார். அடேயப்பா! ஸ்ரீ பரமாச்சார்யாள் சுமார் ஒருமணி நேரத்திற்கு மேல், இந்தியிலும், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் அமுத மொழிகளை வாரி வழங்கினார் ! என்னென்ன தத்துவங்கள் ! எப்படிப்பட்ட விளக்கங்கள்! ‘ந’ என்ற எழுத்தும், ‘ன’ என்ற எழுத்தும் எப்படி உச்சரிக்கப் படவேண்டும் என்று நாக்கை மடித்து அவர் கூறியதை எழுத்தில் வடிக்க இயலாது.