book

நதியைத் திருடிய கள்வன் உலக நாடோடிக் கதைகள்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யூமா, வாசுகி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :218
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123423326
Add to Cart

நெஞ்சை அள்ளும் பயணம் என்றால் அது சிலம்பின் திறம் பாடும் பூம்புகார் பயணமே. அதனை ‘ஊர்’ என்று சொல்வதை விடவும் தமிழர்களின் ‘உயிர்’ என்று சொன்னால் பொருந்தும். இளமுனைவர் பட்ட ஆய்வு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில். பல்கலைக்கழகம் செல்லும் போதெல்லாம் இன்ப ஊற்று ஊறும் மனதில். படிப்பை நினைத்து அல்ல... பாவை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கால் மன்றம் எல்லாம் வாவென்று அழைக்கும் அழைப்பை நினைத்து. கண்ணகியை ஏன் பெண்ணடிமையாக்கினீர்? மலருக்கே தெரியாமல் தேனீக்கள் மதுவைத் திருடுவது போல, மண்ணுக்கே தெரியாமல் வேர்கள் அதன் நீரைத் திருடு வது போல, பார்த்தவுடன் எடுக்கத் தூண்டியும், எடுத்தவுடன் படிக்கத் தூண்டியும், படித்தவுடன் விமர்சனம் எழுதத் தூண்டியும், என் மனதைத் திருடிய நூல் ‘நதியைத் திருடிய கள்வன்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு. பல நாடுகளில் ஓடிய நாடோடி நதிகளைத் திருடி, தமிழில் மொழிபெயர்த்துத் தந்து, என் மனதைத் திருடிய கள்வன் கவிஞர் யூமா வாசுகி. இந்நூல் அற்புத மணிகளால் ஆன 50 அழகிய அணிகளைக் கொண்டுள்ளது.