நூலாசிரியர் தேனி.எஸ். மாரியப்பன் தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமானவர்.
தேனியைச் சேர்ந்த இவர் நகைச்சுவை நூல்களும், பொது அறிவு நூல்களும், ஆன்மீக
நூல்களும், அறிஞர்கள் வாழ்வின் சம்பவங்களும், உலகில் நடந்த வினோத சம்பவ
நூல்களும் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவர்
சமீபத்தில் எழுதிய வழிகாட்டிய மேதைகள்” என்ற நூலை நமது குடியரசுத்தலைவர்
அவர்கள் பாராட்டி, பயனுள்ள நூல் என்று சான்று கொடுத்துள்ளார். சென்னை உரத்த
சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் இந்த நூலை 2006-ஆம் ஆண்டிற்கான சிறந்த
நூலாகத் தேர்ந்தெடுத்து பாராட்டும், பரிசும் வழங்கியுள்ளது.அந்த வரிசையில்
இவர் எழுதியுள்ள 'வழிகாட்டியாய் வாழ்ந்தவர்கள்” (மனித நேய சம்பவங்கள்) என்ற
இந்த நூலும் ஒரு சிறப்புமிக்க நூலாகும். இதில் உள்ள ஒவ்வொரு சம்பவமும்
சுவையானதாகவும், நம் வாழ்வை செம்மைப் படுத்துவதாகவும் அமைந்துள்ளது.-
வழிகாட்டியாய் வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும் இருக்கும் நம் பாரத நாட்டின்
பண்பை இந்நூல் உயர்த்திக் காட்டும் என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு வீட்டிலும்
இருக்க வேண்டிய நூல் இது என்பதே எங்கள் கருத்து.