எங்கும் நிறைந்த பரம் பொருளை இறைவன் என்றனர். அவருக்கு ஒருருவம், ஒரு நாமம், ஒரூர் என எதுவும் இல்லாமல் இன்ப வடிவு, அருள் வடிவு,வீர வடிவு என்னும் நிலைகளில் அவரவர் உள்ளம் விரும்பிய நிலைகளில் உருவங்கள் அமைத்தும்,திரு நாமங்கள் சூட்டியும் வணங்கி மகிழ்ந்தனர். எப்படி வணல்கினாலும் ஈசனின் அருளைப் பெறாலம் என் முன்னோர்கள் நம்பி வழிப்பட்டனர் என்பது திரு மந்திரம். அப்படிப்பட்ட ஈசன் ஆக்கல்,காத்தல்,மறைத்தல்,அருளால்,அழித்தல் என்னும் ஐந்தொழலையும் நடத்திக்காட்டும் பொருட்டு அவ்வப்போது வெவ்வேறு வடிவங்களையும்,தோற்றங்களையும் ,ஆடல்களையும் தாண்டவங்களையும் மேற்கொண்டு அருளினான். அருள் நலமும் கலை எழிலும் நிறைந்து ஓளிரும் அரிய நூலை எமது பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவதி்ல் மகிழ்ச்சியடைகிறோம்.