என்று தொடங்கும் ஜி.முருகனின் கதையைப்போலவே சம்புவின் கவிதைகளும் ஜோசஃப்புகளால் நிறைக்கப்பட்டவை. யாரோ ஒருத்தர் ‘உம்’ கொட்டியபடியே உடன் வருகிற தைரியத்தில் ஏழேழு லோகங்களுக்குள்ளும் அண்டசராசரங்களுக்குள்ளும் நுழைந்து தன்கதையை வளர்த்தும் விரித்தும் கொண்டு செல்வதற்கான தைரியத்தை பாட்டி பெற்றுவிடுவதைப்போல தன்னோடு உரையாட எங்காவது சில ஜோசஃப்புகள் காத்திருப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கைதான் சம்புவை எழுத வைக்கிறது. ஜோசஃப்புகள் மட்டுமல்ல, ஜோசஃப்பை போலவே இருக்கிற கடவுள், சாத்தான், மரியா, நீங்கள், நான் என்று எல்லோருடனும் அவர் நிகழ்த்த விரும்பும் உரையாடல்தான் இக்கவிதைகள். தன்னிலையாக பேசிக்கொள்வது போன்ற தோற்றத்தைக்காட்டினாலும் உண்மையில் அது நம்மை நோக்கிப் பேசுகின்றன. நம்மை நோக்கிப் பேசுவதாக காட்டிக்கொண்டே அவை இன்னொரு தளத்தில் தனக்குள்ளேயே தனக்காக முணுமுணுக்கவும் செய்கின்றன. தன்னிலையையும் முன்னிலையையும் இணைக்கிற புள்ளியாக இருக்கிற ஜோசஃப்புகள் யாரோபோல் தெரிகிற நம்மின் பிரதிகள்