சங்க இலக்கியங்களைப் பாடியவர்கள்; அப்பாடல்களைத் தொகுத்தவர்கள்; அப்பாடல்களுக்கு உரை எழுதியவர்கள்;ஓலையிலிருந்து அச்சில் பதிப்பித்தவர்கள்;அப்பாடல்களை பல்வேறு கண்ணோட்டங்களில் ஆய்வு செய்தவர்கள் என்று சங்க இலக்கியம் ஐந்து கட்டங்களைக் கடந்து இப்போது ஆறாவது கட்டத்தில் இருக்கிறது.சங்கப் பனுவல்களைக் கால நிரல்படுத்துவதற்கு சடங்குகளை அடுப்படைத் தரவாகக் கொள்ளும் முனைவைச் சுட்டிக்காட்டுகிறது இந்த நூல்.