சோசலிச சமூகத்தில் தனிமனித உரிமைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும். சோசலிச சமூகத்தில் அதிகார வர்க்கத்தின் ஆற்றலுக்கு இணையான, அதனை தேவையெனில் அதிகாரத்தை எதிர்த்து நெறிப்படுத்தும் ஆற்றல் படைத்த ஜனநாயக எதிர்சக்திகள் மக்களிடம் இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
சோசலிச பொதுவுடைமைச் சமூகத்தின் நோக்கங்களையும், அது எதிர்கொள்ளப்போகும் சிக்கல்களையும் குறித்த தெளிவான பார்வையும் சிந்தனையும், முதலாளித்துவச் சமூகத்திலிருந்து விடுபட்டு, சோசலிச சமூக மாற்றத்திற்கு தயாராக இருக்கும் இன்றைய காலக்கட்டத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த சிந்தனையாகவும், உரையாடல்களாகவும் இருக்க வேண்டும்.