நான் எடுத்தது இரண்டாம் பாகம். அதன் ஒரு சில பக்கங்களைப் படித்தவுடனேயே இது ஒரு நல்ல நூல் எனவே இதனை முழுமையாகப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து நேராகப் பதிப்பகத்தாரைத் தொடர்பு கொண்டேன். ஒரு சில பிரதிகளே உள்ளன என்று அவர்கள் சொன்னதால் அந்த வாரவிறுதியிலேயே சென்னைத் தியாகராய நகரில் இருந்த பதிப்பகத்திற்குச் சென்று இரண்டு பாகங்களையும் ஐந்தைந்தை வாங்கிக்கொண்டேன் (எனக்கு ஒன்று, மற்றவை என் நண்பர்கள் சிலருக்கும் பேராசிரியர் ஒருவருக்கும்!)
நூலின் ஆசிரியர் அண்ணா பல்கலையில் இயற்பியல் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர், அவரும் ஒரு கவிஞர் (தனியாகக் கவிதை நூல்களும் வெளியிட்டுள்ளார்!)
நூலின் பெயருக்கேற்ப இயற்பியலின் வரலாற்றுச் சம்பவங்களை இலக்கியத்தோடு கலந்து மிக அழகாகத் தந்துள்ளார் ஆசிரியர்.