மறைந்த மோதிரம் :வாழ்க்கை புதிரானது. மனித மனம் ஆழங்கான இயலாத்து. உணர்வுகளுக்கு வரையறைகள் கிடையாது. எனில், தாயின் வயிற்றிலிருந்து உயிருடன் மண்மீது தோன்றுவதன் பின்னர் உயிர் பிரிந்தும் மண்ணுக்குள் மறைவதும் தவிர வேரொன்றும் நிச்சயமில்லாத மனித இனம் சற்றேனும் அமைதி அடைவது எப்போது? எதனால்?
இந்த சிக்கலான கேள்விக்கு பதில் தேடும் முயற்சியைப் பலரும் பலவிதமாக மேற்கொள்கிறார்கள். சிறுகதையாக எழுதுவதும் அதிலொன்று என்று கூறத்தக்க வகையில் முரண்பட்ட பல உணர்வுகளை எழுப்பும் அனுபவங்களைக் கூறுகின்றன. இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள், தோழர் திருவைகாவூர் கோ-பிச்சை அவர்களின் மொழிப்பெயர்ப்பில் எளிய செய்திகளும் அழகான சொற்களின் பயன்பாட்டினால் பளீரெனத் துவங்குகின்றன.கதைகளைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துள்ள தோழர் பிச்சையின் வயதை உத்தேசித்துப் பார்க்கையில், சில கதைகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
- பதிப்பகத்தார்.