மக்குள்ளே பொதிந்துள்ள நமது சொந்த ஆற்றலை வெளிக் கொணரும் நமது உள்ளார்ந்த, ஓர் அபார சக்தியை நம் அனைவராலும் கண்டுகொள்ள முடியும். அதை வசப்படுத்திக் கொண்டால், சாதிக்க வைக்கும், நினைத்ததை நிறைவேற்றித் தரும் அளவு கடந்த திறனை, அது ஊற்றெடுக்கச் செய்யும். நாம் அனைவருமே வெற்றி பெறும் சக்தி கொண்டவர்கள் மட்டுமல்ல, அதைக் கண்டுணர்ந்து சுலபமாகப் பயன்படுத்தும் திறமையும் கொண்டவர்கள் என்பது நிரூபணமாகும்.