கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினைக்கு மேல் பிரச்சினை வரலாம். நீங்கள் இருவரும் வித்தியாசமாக யோசிப்பதும் செயல்படுவதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். சில சமயம், நண்பர்களிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் பிரச்சினைகள் வரலாம். எதிர்பாராத சம்பவங்களும் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம்.
உங்கள் திருமண வாழ்க்கையைப் பல கனவுகளோடு ஆரம்பித்திருப்பீர்கள். அதனால், பிரச்சினைகள் வரும்போது சோர்ந்துவிடாதீர்கள். அவற்றைச் சரிசெய்ய முயற்சி செய்யும்படி பைபிள் சொல்கிறது. (மத்தேயு 5:23, 24) பைபிள் ஆலோசனைகளின்படி நடந்தால் எந்தப் பிரச்சினையையும் உங்களால் நிச்சயம் சமாளிக்க முடியும்.