இந்தியாவில் பண்டக முன்பேர வர்த்தகம் ஒரு நூற்றாண்டிற்கும் பழமையானது மற்றும் முதல் முன்பேர வர்த்தகம் 1875-ம் ஆண்டு பம்பாய் பருத்தி வணிகக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது. பண்டக வழிச் சந்தை 1900-ம் ஆண்டில் பம்பாயில் எண்ணெய்வித்தக்களுக்காக தொடங்கப்பட்டது. கச்சா சணல் மற்றும் சணல் பொருட்களுக்கான சந்தை 1912-ம் ஆண்டு முன்னோக்கு வர்த்தகம் கல்கத்தாவில் தொடங்கப்பட்டது. கோதுமைக்கான முன்னோக்கு வர்த்தகம் 1913-ம் ஆண்டிலிருந்து ஹாபூரில் செயல்பட்டு வருகிறது மற்றும் தங்க, வைர வர்த்தகம் 1920 முதல் செயல்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து மற்ற பயிர்களுக்கு முன்னோக்கு வர்த்தகம் தொடங்கப்பட்டன. உலகப் போர் நடைபெற்ற காலங்களில் இந்திய அரசு இக்கட்டான விநியோக சூழ்நிலையை சமாளிக்க அதிக எண்ணிக்கையிலான பண்டக முன்பேர வணிகத்திற்கு தடை விதித்தது. 1960 களில் பண்டக முன்பேர வர்த்தகம் அதிக அளவிலான பண்டங்களுக்கு தடை செய்யப்பட்டது மற்றும் சிறய பொருட்களான மிளகு மற்றும் மஞ்சளுக்கான முன்பேர வர்த்தகம் மட்டும் தொடர்ந்து செயல்பட்டது.