தமிழ் பேசும் இடமெல்லாம், தமிழ் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்படும் எழுத்தாளர்களிலே குறிப்பிடத்தக்கவர் திருமதி ரமணிசந்திரன் தான் என்பதை நாடறியும். என்னதான் அந்த எழுத்துக்களிலே கவர்ச்சி உள்ளது?" என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் கேட்டாலும் படிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து கொண்டுதானிருக்கிறது. கதை என்றால் வாழ்க்கையோடு ஒட்டியதாக இருக்கவேண்டும். குடும்ப நிகழ்வுகளைச் சொல்ல வேண்டும். பிரச்சனைகளைச் சொல்லும்போது, முடிந்த வரை தீர்வுகளையும் சொல்ல வேண்டும். கட்டுப்பாடான வாழ்க்கைக்கு, அமைதியான வாழ்க்கைக்கு வழி காட்ட வேண்டும்." இவை அத்தனையும் திருமதி ரமணிசந்திரன் நாவல்களில் உள்ளன. ஆகவே படிப்பவர்கள் மேலும் படியுங்கள். பாராட்டுபவர்கள் மேலும் பாராட்டுங்கள். நல்ல புதிய புதிய வாசகர்கள் மேலும் மேலும் வருவார்கள்.