கீதை மறைபொருள் நிறைந்த மொழியில் எழுத பட்டுள்ளது அதனால் பல உரைகள் பல விதமாக எழுத பட்டன ஆனால் பெருபாலான கீதை உரை ஆசிரியர்களும் தங்களுடைய சொந்த எண்ணங்களையும் பார்வைகளையும் கீதையின் மேல் திணித்தே பேசியும் எழுதியும் வந்திருகிறார்கள் சிலர் சற்று கட்டு பாடுடன் எழுதினாலும் கீதை ஒரு பேருரை முடிவற்ற எல்லை இல்லாத பரிணாமமாக விளங்க கூடியதாக இல்லாமல் குறிப்பிட்ட கோண விளக்க மாகி விடுகிறது. ஆதி சங்கரர் கீதை ஞானத்தை மையமாக கொண்டது என்கிறார். ராமானுஜர் பக்தியை பிரதானமாக்கி கீதை உபதேசித்தார் காந்திஜியும் திலகருமோ கர்ம யோகத்தை அடிப்படையாக எண்ணினார்கள்.
ஆனால் கீதையின் மறை முக மொழிகளுக்கு நியாய பூர்வமான முறையில் விளக்கம் சொல்ல வேண்டும் என்றால் எவருடைய சுயதன்மையும் கிருஷ்ணரை போல பல கோணங்களில் பரவி நிறைந்து பூரணமாக இருக்கிறதோ அவரால்தான் முடியும் அவர் தற்போது மனிதராக அல்லாமல் வாழ்கையின் பரந்த வெளியில் கலந்தது விட்டவராகத்தான் இருக்க வேண்டும் கண்ணனின் பூரண உருவமும் கருத்துகளும் பிரதிபலிக்க தகுதி வாய்ந்த மிக துல்லியமான கண்ணாடியாக மாறி விட்டவராக இருக்க வேண்டும்.