செய்முறை:
பறங்கிக்காய் பழுத்ததாக இருக்க வேண்டும். அதன் மேல்தோலைச் சீவிவிட்டுத்
துருவிக் கொள்ளவும். அதை நன்கு பிழிந்து நீரை நீக்கிவிட்டு எடுத்து
வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால்
சூடானதும் பறங்கிக்காய் துருவலை அதில் போட்டு வேக விடவேண்டும். பால்
காய்ந்து சுண்டியதும் இறக்கிவிடவும். அடுப்பில் இரும்புச்சட்டியை வைத்து
நெய் விட்டு அது காய்ந்ததும் பறங்கிக்காய் துருவலைப் போட்டு வதக்கி
எடுத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அளவாகத் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரையைப் போட்டு
கரைத்து அடுப்பில் வையுங்கள். சர்க்கரைக் கரைசல் பாகுபதம் வந்ததும்
பறங்கிக்காய் துருவலைப் போட்டு நன்றாக மசித்துக் கிளறவும்.