செய்முறை:
அரிசியைக் களைந்து கொள்ளவும். தேங்காய், தனியா, பூண்டு, மிளகாய்த்தூள்
இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அம்மியில் அரைத்தால்
இன்னும் சுவையாக இருக்கும்.உருளைக்கிழங்கைக் கழுவி தோலுரித்து, பெரிய
துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைத்
தாளித்து, அதனுடன் கழுவி வைத்துள்ள இறாலைப் போட்டு பொன்னிறமாக வறுத்துக்
கொள்ளவும். அதனுடன் உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், தேவையான அளவு
தண்ணீர், அரிசி, உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வேக வைத்து
இறக்கவும். சூடாகப் பரிமாறவும்