இந்நூலில் திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரம் யோகநெறிகளை, வாழ்வியல் கருத்துக்களை விளக்குவது திருமந்திரப் பாடல்களை நன்கு படித்து அப்பாடல்களில் அமைந்துள்ள பொருள்களை யாவரும் உணர ஓவியமாகத் தீட்டியிருப்பது பாராட்டத்தக்கது.
திருமந்திரப் பாடல்களுக்குப் பஞ்சாட்சர் தீபுரை நமது ஆதீனத்தில் வெளியிடப் பெற்றுள்ளதை தமிழ்க்கூறு நல்லுலகம் நன்கறியும். பாடலும் உரையும் கற்றாரை மட்டுமே மகிழச் செய்யும். ஓவியம் கற்றார் கல்லார் இருவரையும் மகிழச் செய்யும்.