இன்றைய சமுதாயத்தில் நிகழும் அவலங்களைச் சுட்டிக்காட்டி, சமூகக் கொடுமைகளால் பாதிக்கப்படும் மனிதர்களின்பால் அனுதாபத்தை ஏற்படச் செய்து, நம்மைச் சிந்திக்கத் தூண்டுவது இச்சிறுகதைத் தொகுப்பாகும்.
வேலையில்லாக் கொடுமையால் இளைஞர் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வரதட்சணைக் கொடுமையால் நிகழும் சிக்கல்கள், ஓய்வு பெற்ற நிலையில் முதியோர் எதிர்கொள்ளும் மனக்கோளாறுகள், நச்சு இலக்கியப் படைப்பாளர்களால்ஏற்படும் அவலங்கள் ஆகிய சமூகப்பிரச்சினைகளை இந்நூலாசிரியர் இத்தொகுப்பில் அழகுறச் சித்தரித்துள்ளார்.