'புரட்சிக்கவி' நாடகம், தவிர்த்து ஏனைய இரு நாடகங்களும் புராணக் கதைகளைக் கருவாக்க் கொண்டவை. கூத்தாக நடத்தப்படும் நாடகங்களைப் பார்க்கும் பாமரமக்கள் பகுத்தறிவு பெறுவார்கள் என்பது தெளிவு. கணவன் - மனைவி என்றால் சொத்து சேர்ப்பதில் குறியாக இருப்பார்கள். ஆனால் இங்கே கணவன் மனைவியாக இருக்கும் படைப்பாளர்கள் மக்கள் மனங்களில் அறிவுச் சொத்துச் சேர்க்கின்றவர்களாக அமைந்து கலையுலகச் சேவைகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டவர்கள். இந்நூல் பாடத்திட்டத்திறகும் பாமர மக்களுக்கும் பயன்செய்யும் நூல்.