வரலாற்றில் பெரிதாகப் பேசப்படும் மிகச் சிறு ஆதாரம் ஒன்று நுட்பமாகப் பார்க்கப்படாமல் தமது நோக்கத்திற்கு ஏற்றவாறு திரிக்கப்படுகின்றது என்பதை வெளிப்படுத்தும் பார்வை இவருடைய கட்டுரைகளின் மற்றொரு மையம். மூலத்தைப் பார்க்காமல் யார்யாரோ எழுதியதையே நம்பிக்கையான ஆதாரமாகக் கொண்டு சடங்குபோல வரலாற்றுக் கருத்து உதிர்க்கப்பட்டு வருவதைக் கேள்விக்குட்படுத்தும் பார்வை இது.