மனிதன், நூறண்டுகளுக்கு மேலும் வாழ்வது என்பது அதிசயக் செய்திகளில் ஒன்று. தொண்ணூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்பவர்களே மிகச் சிலர்தான். இந்த அடிப்படையில் பார்த்தால், ''ஐம்பது வயதைத் தாண்டிய நான், வாழ்க்கையில் முக்கால் பகுதிக்கு மேல் முடித்துவிட்ட நிலையில் என் கடந்த கால வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்து ''நெஞ்சுக்கு நீதி'' என்ற தலைப்பில் இந்தப் பெருநூலின் முதற் பாகத்ததைத் ''தினமணி கதிர்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை ''குங்குமம்'' இதழில் தொடர்ந்து எழுதினேன். இரண்டாம் பாகத்தை எழுதி முடிக்கும்போது அறுபது வயதைக் கடந்து; இந்த நூல்களுக்கான முன்னுரையை எனது அறுபத்தி இரண்டாவது அசுவையின்பொழுது எழுதுகிறேன்.